ads

Sunday, August 23, 2020

Childhood Memories 3 :

பால்யகால நினைவுகள் : 3 

கிராமத்தில், மாலைவேளையில் பொழுது போகாமல் நானும், என் அண்ணனும் சுற்றித்திரிந்தோம். அப்போதெல்லாம் எல்லோருடைய வீடுகளிலும் டி.வி இருக்காது. அது ஒரு கிராமம் என்பதால் ஒரு தெருவில் நான்கைந்து வீடுகளில் டி.வி இருந்தால் அதிகம்.

தெருவில் நடந்த சென்று கொண்டிருந்த நாங்கள் ஒரு வீட்டில் பத்து, பதினைந்து பேர் கூட்டமாக டி.வியில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, நாங்களும் அந்தக்கூட்டத்தில் இணைந்து டி.வி பார்த்தோம். நாங்கள் டி.விக்கு வெகு அருகில் உட்கார்ந்து டி.வி பார்க்க நேர்ந்தது.

அப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போது அதில் ஒரு கதாபாத்திரம் மட்டும் திடீரென்று இயல்புக்கு மீறி, கட்டைக் குரலில் பேசுவதுபோல் தோன்றவே… நான் குழப்பத்துடன் என் அண்ணனைப் பார்த்தேன். அவனும் அந்த விசயத்தை கவனித்து, என்னைக் குழப்பத்துடன் பார்த்தான். பிறகு நாங்கள் இருவரும் மற்றவர்களை திரும்பிப் பார்க்க, அவர்களோ எந்த சலனமும் இல்லாமல் டி.வி பார்த்துக் கொண்டிருக்க, எங்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரிப்பை அடக்கிக் கொண்டு மீண்டும் டி.வி பார்க்க, அதே போலவே, அதே கதாபாத்திரம் கட்டைக் குரலில் பேச… நாங்கள் மட்டும் ரகசியமாக சிரித்தோம். என்ன மாயமோ தெரியவில்லை... மற்ற அனைவரும் எந்த சலனமும் இல்லாமல் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். எங்களால் சிரிப்பை அடக்கமுடியாமல் போனநிலையில், நாங்கள் சிரிப்பதை மற்றவர்கள் கவனித்து விட… எங்கே அவர்கள் எங்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டுவிடுவார்களோ என்று பயந்து, நாங்களாகவே வெளியே வந்து விட்டோம்.

ஏதோ ஒரு அமானுஷ்யம் அன்று எங்களை திட்டமிட்டு வெளியே தள்ளிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

மறுநாள் காலையில் நாளிதழ் செய்தி : “வீட்டின் மேற்கூரை இடிந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் படுகாயம்.”

ஹி… ஹி… மேற்கண்ட கடைசி வரி மட்டும் கற்பனை. சுவாரஸ்யமான ஒரு பொய்.

“மோஸ்ட் வெல்கம் அம்மா…”

சும்மா... எனக்கு மிகவும் பிடித்த டி.வி விளம்பரத்தின் எஃபெக்ட்டை இந்த உண்மைச்சம்பவத்தில் இணைத்துப்பார்த்தேன்.

No comments:

Post a Comment

Blogger Widgets